தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை

1 Min Read

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும்  தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  தாம்பரம் மாவட்டக் கழகத்  தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,  ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *