கைவிட்ட பகவான் – கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டு இருந்த பெண் மாரடைப்பால் பலி

1 Min Read

அய்தராபாத், ஜூன் 7 – தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் ராஜராஜேஷ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று சாமிக்கும்பிட்டுகொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமி. இவர் ராஜனா சிரிசிலா மாவட்டம் விமுலாவாடி பகுதியில் உள்ள ராஜ ராஜேஷ்வர சுவாமி வழிபாட்டு தலத்திற்கு சென்றார். வழிபாட்டு தலத்திற்குள் சென்ற அவர் வரிசையில் நின்று சாமிகும்பிட்டுகொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வழிபாட்டு தலத்தில் வரிசையில் நின்றபோது அப்படியே சுருண்டு விழுந்தார். அவரை மீட்ட மருத்துவக்குழுவினர் லட்சுமியை பரிசோதனை செய்தனர். அதில் லெட்சுமி உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியின் உடல் கூராய்வுக்காக அருகில் உள்ள மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *