திருவையாறு: கழகத்தின் சார்பில் துண்டறிக்கை பரப்புரை

1 Min Read

திருவையாறு, ஆக. 18- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 8.8.1925 அன்று திருவையாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அய்யா தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகிலும், கண்டியூர் தந்தை பெரியார் சிலைக்கு அருகிலும் திருவையாறு ஒன்றிய. நகர கழகத்தின் சார்பில் திருச்சி. தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில்  வேளாண்மை செழித்திட சோழப் பெருவளத்தான் கரிகால்சோழனின் பெருமை சொல்லும் துண்டறிக்கை விநியோகிக் கப்பட்டது.

இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட விவசாய அணித் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன். திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின், அமைப் பாளர் மு.விவேகவிரும்பி, மாவட்ட இ. அணி செயலாளர் க.அன் பழகன், நகரத் தலைவர் ஆ.கவுதமன், கண்டியூர் தோழர் பெரியார்அலி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண் டறிக்கைகளை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *