லண்டன், ஆக. 18- உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடை கள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச் சரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தை
உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டு களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப் படவில்லை.
விரைவில் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செல் கிறார்.
இந்நிலையில், ‘விருப் பக் கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் காணொலியில் பேசினர். அதில், இங் கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்து கொண்டார்.
டிரம்புக்கு பாராட்டு
அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.
கொலைகள் நடப்ப தற்கு முற்றுப்புள்ளி வைக் கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.
பொருளாதாரத் தடை
உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத்தன்மையை அய்ரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை தடுப்பது முக்கியம்.
உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப் போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், ஏற்கெனவே அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.