வெம்பக்கோட்டை அகழாய்வில் அணிகலன் கண்டெடுப்பு

1 Min Read

அரசியல்

சாத்தூர், ஜூன் 7 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் அகழாய்வில்  தங்க அணிகலன் மற்றும் தங்கத் தகடு ஆகியவை கண்டெடுக்கப்பட் டன. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம், வைப்பார் ஆற்றின் வடக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப் பகுதி தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அகழாய்வில் இதுவரை 3,254 தொல்பொருள்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. தொல்பொருள் களான கண்ணாடி, மணிகள், அரிய வகை கல்மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்  காய்கள், பகடைக்காய், தக்களிகள், மணிகள், காதணிகள், சக்கரங்கள், எடைக் கற்கள், முத்திரைகள், திமிலுள்ள காளைகள், சுடுமண் உருவங்கள், சுடுமண்பதக்கங்கள் வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளை யல்கள், சங்கு மணிகள், செப்புக் காசுகள், இரும்புப் பொருள்கள், தங்க அணிகலன், கற்கோடாரி, செப்புப் பொருள்கள், கண்ணாடி வளையல்கள், கல் பந்துகள், சுடுமண் பந்துகள், அரவைக்கல், மெருகுக்கல், சுடுமண் அச்சுக்கள், சுடுமண் புகைப்பான்கள், சுடு மண் விளையாட்டுப் பொருள் கள் மற்றும் தந்தத்தினாலான பதக்கங்கள் போன்றவை கிடைத் துள்ளன. தற்போது நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகல ஆய்வு பணியின் போதும் சங்கு வளை யல்கள் சுடுமண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொல்பொருள்கள் கண்டெடுக் கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இன்று தங்கத்தினால் ஆன தோடு மற்றும் தங்க தகடு தலா 2 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தங்கத் தகடு மற்றும் தங்கத் தோடு கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி பொது மக்கள் ஏராளமான திரண்டு வந்து பார்வையிட்டுச் செல் கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *