கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய காதல் இணை: உடனடித் திருமணம்!

1 Min Read

பெய்ஜிங், ஆக. 17- சீனாவைச் சேர்ந்த 31 வயதுடைய மா என்ற இளைஞர், கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பியதையடுத்து, தமது காதலியுடன் உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, மா ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைத் தடுப்பில் மோதியது. நல்வாய்ப்பாக, காரில் இருந்த மா மற்றும் அவரது காதலிக்குச் சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இருக்கை வாரை அணிந்திருந்ததே அவர்கள் உயிர் பிழைக்கக் காரணம் என மா தெரிவித்தார்.

இந்த விபத்து, ஏற்கெனவே திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த இந்த இணையரை உடனடியாக முடிவெடுக்கத் தூண்டி யுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட அவர்களது பெற்றோர், “வாழ்விலும் தாழ்விலும் இணைபிரியாதவர்கள்” என்று வாழ்த்துத் தெரிவித்தனர். இணைய வாசிகளும் இந்த இணைக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *