இராணிப்பேட்டை, ஜூன் 7- இராணிப் பேட்டை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 4-6-2023 அன்று சம்பத்துராயன்பேட்டை ஆறுபடையார் திருமண மண்ட பத்தில் மாலை 5 மணிக்கு நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று கழக காப்பாளர் பு. எல்லப்பன் உரையாற்றினார்.
மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள தோழர்கள் கழகப் பொருளாளர் முன்னி லையில் அறிமுகம் செய்து கொண்டனர். மாவட்டத் தலை வர் சு.லோகநாதன், மாவட்டச் செயலாளர் செ. கோபி, பொதுக் குழு உறுப்பினர் கோ. சூரிய குமார், சொ.சீவன்தாஸ், க.தீன தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்து கூறி உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் தலை மையேற்று உரையாற்றுகையில் கழகம் கடந்து வந்த பாதைகளை எடுத்துக் கூறினார். தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், கழகத் தலைவர் ஆசிரி யர் ஆகியோர் சந்தித்த சவால் களையும், இட ஒதுக்கீடுக்காக கழகம் மேற்கொண்ட போராட் டங்களையும் சுட்டிக் காட்டினார்.
கழகப் பொறுப்பாளர்கள் முதற்கட்டமாக 7 ஒன்றியங்களில் வைக்கம் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, சேரன்மாதேவி குரு குலப் போராட்ட நூற்றாண்டு உள்ளிட்ட விழாக்களை முன் னிட்டு தெருமுனைக் கூட்டங் கள், பொதுக் கூட்டங்கள் நடத் துவதற்கான பணிகளை உடனே தொடங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உரையாற்றினர்.
கூட்டத்தில் கே.இராஜேந் திரன், எஸ்சி.சுப்பிரமணியன், இரா.நந்தன், ஜி.கன்னியப்பன், ஏ.ஞானபிரகாசம்,கெ.ஆறு முகம், இராசா, ஜி.திருநாவுக்கரசு, க.ஆனந்தன், ஆ.கபிலன், த.அன்பு, லோ.செல்வி, அறிவரசி, லோ.மணியம்மை, லோ.அறிவு மணி, ஞா.தென்னரசு, யு.பிரவீன், மணி, த.முகுந்தன், த.மேகவர்னன், கே.உதயகிரண், முனைவர் கி.சவுந்தர்ராஜன், க.கலைமணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ‘பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?’ ‘ஆசிரியர் 90’ நூல்களை கழகப் பொருளாளர் வெளியிட தோழர் கள் பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக தோழர் ப.இராவ ணன் பாடலுடன் அனைவருக் கும் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மா னங்களை சிறப்பாக செயலாக்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.
2. இராணிப்பேட்டை மாவட் டக் கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளள திரா விடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்தினை தெரிவித்து வரவேற்று மகிழ்கிறது.
3. வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழாவினை முன்னிட்டு அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு மற்றும் திமிரி ஆகிய ஒன்றியங்களில் ஜூன் திங்களில் பொதுகூட் டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
4. வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி ஒன்றியங்களை இராணிப்பேட்டை மாவட்டக் கழகத்தில் இணைத்திடுமாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை இம்மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் கேட்டுக் கொள் கிறது.
5.மாவட்டத்தில் உள்ள கழக உறுப்பினர்களின் பட்டியலை, அமைப்பு விவரங்களை 10.06.2023ஆம் தேதிக்குள் கழகப் பொருளாளர் அவர்களிடம் அளிப்பதெனவும், அப்பணியை நிறைவேற்றி தந்திட கழக காப்பா ளர் பு.எல்லப்பன் அவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.