வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஜூன்7 –  தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான இணைய வழியில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 5.7.2023.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம்(<www.trb.tn.gov.in>)  வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப் பித்தவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300. தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வாக 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்க இருக்கிறது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *