வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

1 Min Read

அரசியல்

சென்னை,ஜூன்7 –  தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான இணைய வழியில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 5.7.2023.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம்(<www.trb.tn.gov.in>)  வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப் பித்தவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300. தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வாக 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்க இருக்கிறது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *