உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்க இணையதளம், அலைபேசி செயலி

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 7– உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார் களைத் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் செய ல் படுத்தப்பட் டுள்ளது. மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத் துக்குள் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. 

இதை மேம்படுத்தும் விதமாக தற் போது foodsafety.tn.gov.in என்ற இணைய தளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer App அறிமுகப்படுத் தப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த இணையதளம், எளிய முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி களிலும், மாற்றுத் திறனாளி களும் பயன்படுத்தும் வகையில் ஸ்க்ரீன் ரீடர் வசதிகளுடனும் உருவாக்கப் பட் டுள்ளது.

மேலும், உணவு பாது காப்புத் துறை மூலம் நுகர் வோர் குறைதீர்ப்பு செயலி யில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யின் மறு பயன்பாடு, உணவு செறிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும் படங்கள் தயாரிக்கப்பட் டுள்ளன.

இந்த குறும்படங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்பட் டுள்ளது. பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை யால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி ஆகிய சேவை களை பயன்படுத்தி பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *