கழகக் களத்தில்…!

2 Min Read

17.08.2025 ஞாயிற்றுக்கிழமை

குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம்

குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன்  (மாநில .விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147வது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு,  பிரச்சார பணிகள் * வேண்டல்: குடவாசல் ஒன்றியத்தில் உள்ள, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பது  க.அசோக்ராஜ் ஒன்றிய செயலாளர்

நூல் அறிமுக விழா

சென்னை: மாலை 4.30 மணி *இடம்: கவிக்கோ மன்றம், ஆழ்வார்பேட்டை, சென்னை. *நூல்: ஜப்பானியப் பழங்குறுநூறு *ஆசிரியர்: ச.கமலக்கண்ணன் *தலைமை: பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) *நூல் அறிமுகம்: முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் *இலக்கிய அறிமுகம்: ச.கமலக்கண்ணன் *அன்புடன் அழைக்கும்: மக்கள் சிந்தனைப் பேரவை, சென்னைக் கிளை.

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
சார்பாக சிறப்புக் கருத்தரங்கம்

நாகர்கோவில்: காலை10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைமை: உ.சிவதாணு ப.க. மாவட்ட தலைவர் * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்),  ம.தயாளன் (கழக காப்பாளர்), மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்) *வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர் * சிறப்புரை: வ.இளங்கோ (திமுக தொழிற்சங்க நிர்வாகி)   * தலைப்பு: பெரியார் எனும் பெரும் நெருப்பு  * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட துணைச் செயலாளர் *அன்புடன் அழைக்கும் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

18.8.2025 திங்கள்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை:
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *பொருள்: பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *வேண்டல்: திரவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *