வங்கியில் 240 அதிகாரி பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஆபிசர் பிரிவில் 224 (கிரடிட் 200, இண்டஸ்ட்ரி 8, சிவில் 5, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 4, ஆர்க்கிடெக் 1, பொருளாதாரம் 6), மானேஜர் பிரிவில் 16( பொருளாதாரம் 4, டேட்டா சயின்டிஸ்ட் 5, சைபர் செக்யூரிட்டி 7) என மொத்தம் 240 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பொருளாதாரம் பிரிவுக்கு எம்.ஏ., ஆர்க்கிடெக் பிரிவுக்கு பி.ஆர்க்., கிரடிட் பிரிவுக்கு சி.ஏ., மற்ற பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2023 அடிப்படையில் ஆபிசர் பிரிவுக்கு 21 – 30, மானேஜர் பிரிவுக்கு 27 – 38 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : இணைய வழியாக எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180 (ஜி.எஸ்.டி., வரி உட்பட)

கடைசி நாள் : 11.6.2023

விவரங்களுக்கு : pnbindia.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *