அண்டார்டிகாவின் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானத்தை இறக்கிய இளைஞருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை

1 Min Read

புரோஸ் அய்ரினா, ஆக. 16- அண்டார்டிகாவின் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானத்தை இறக்கியதற்காக அமெரிக் காவைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கினார்.

தனி விமானத்தில் பயணம்

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது ஈதன் குவோ, இளையோர் புற்றுநோய் ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்காக உலகம் முழுவதும் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, சிலிக்கு அருகிலுள்ள அன்டார்டிக்கா பகுதியில்  சட்டவிரோதமாக விமானத்தைத் தரையிறக் கியதால் அவர் கைது செய்யப்பட்டார்

புன்ட்டா அரெனாஸ் என்ற பகுதி வரை மட்டுமே விமானத்தை இயக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அனுமதியை மீறி அன்டார்டிக்கா பகுதியில் தவறான தகவல்களைக் கொடுத்து விமானத்தைத் தரையிறக்கியதால் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நூதன தீர்ப்பு

அவரது பயணத்தின் நோக்கத்தை அறிந்து கொண்ட நீதிபதி சேகரிக் கப்படும் நிதியில்  சிலியில் உள்ள சிறார் புற்றுநோய் அறக்கட்டளைக்கு 30,000 டாலர் (சுமார் ரூ.25 லட்சம்) நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அவரது பயணத்தை தொடர அனுமதி கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *