பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 Min Read

சென்னை, ஆக.16- பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தாா். இந்த நிலையில், அவரது கருத்தைக் குறிப்பிடாமல், எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.8.2025) வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவதுடன், அதிகமான பெண் பணியாளா்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. திறனுடைய வகையிலும், குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவை பாரபட்சமற்ற வகையில் இருப்பதால், குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக இருக்கின்றனா்.

பெண்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் அதற்கேற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில், விடியல் பயணத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *