கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அய்ந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைப்பு

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை ஜூன் 8 – கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட் டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ‘கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும், 

5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்’ என, சட்டசபையில் அமைச்சர் வேலு அறிவித்தார்.

அதன்படி, சென்னை கிண்டி யில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், மகிழம் மரக்கன்று நட்டு, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுதும் நேற்று, நெடுஞ்சாலை துறையின், 340 சாலைகளில், மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகைகளைச் சேர்ந்த, 46 ஆயிரத்து, 410 மரக்கன்றுகள் நடப் பட்டன. இவை, 24 மாத கால வளர்ச்சி உடையவை.

பருவமழைக்கு முன், அய்ந்து லட் சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, வேலு, சுப்ரமணியன், நெடுஞ்சாலைகள் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம் பாட்டு திட்ட இயக்குனர் அண்ணா துரை மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *