ஒழுக்கத்தை வளர்க்குமா பக்தி? மோதலை வளர்க்குமா? திருச்செந்தூர் கோவிலில் இரு ஜாதியினருக்கிடையே அடிதடி

1 Min Read

திருச்செந்தூர் ஆக.15 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், கொடிபட்டம் வாங்குவது தொடர்பாக இருஜாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கொடியேற்ற விழா ஒரு மணி நேரம் தாமதமானது.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவிற்கான கொடிபட்டம் வழங்குவதில், இரண்டு ஜாதி சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மண்டபத்திலிருந்து வெளியேறினர்

செங்குந்தர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் கொடிபட்டத்தை மண்டபத்தின் வெளியே வைத்து தருவதாகக் கூறினர். இதற்கு மற்றோரு ஜாதி சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.  மோதலுக்குப் பிறகு, ஒரு ஜாதி அமைப்பினர் மண்டபத்தில் இருந்து வெளியேறினர். பின்னர், கொடிபட்டத்தை கோவில் நிர்வாகத்திடம் இருந்து வாங்குவோம் என்று கூறி, அனைவரும் சிவன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு கொடிபட்டத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அய்யப்பன் (அய்யர்) கொடிபட்டத்தை ஏந்தியவாறு யானை மீது அமர்ந்து, கோவில் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தார். இந்தச் சம்பவத்தால் கொடிபட்டம் வீதி உலா ஒரு மணி நேரம் தாமதமானது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *