2024 மக்களவைத் தேர்தல் – ஆயத்தப் பணிகள் தொடக்கம் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தகவல்

Viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 8 –  இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத் தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு இயந்திரங்கள் இருப்பு, தேவை குறித்த ஆய்வு நடந்து வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறிய தாவது: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடை பெற உள்ளது. முதல்கட்டமாக, மாநி லங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப மின்னணு இயந்திரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, வேறு சில மாநிலங்களிலும், சமீபத்தில் கருநாட காவிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்தல்களின்போது, அண்டை மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்ததை அறியும் விவிபேட் இயந்திரங்கள் தேவைக்கேற்ப அனுப் பப்பட்டன.

தற்போது மக்களவை பொதுத் தேர்தலுக்கு தமிழ்நாடும் தயாராக வேண்டிய நிலையில், மாவட்டம் தோறும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந் திரங்களை மதிப்பிட்டு, அவற்றின் நிலையை ஆய்வு செய்யும் பணி சமீபத் தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

கூடுதலாக 35 சதவீத இயந்திரங்கள்: 

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைப் படும் மின்னணு இயந்திரங்களின் அளவை விட கூடுதலாக 35 சதவீதம் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப் படையில், மாவட்டங்களுக்கு 135 சத வீதம் அடிப்படையில், அதாவது 200 வாக்குச்சாவடிகள் இருந்தால் 270 இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயந்திரங்கள் இருப்பு தொடர்பான ஆய்வுக்கு பிறகு, மின்னணு இயந் திரங்களின் முதல்நிலை சோதனை வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னணு இயந்தி ரங்கள் மற்றும் இங்கு உள்ள இயந் திரங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவை இயங்கும் நிலையில் வைக்கப்படும். 

இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ‘இயந்திரம் நல்ல நிலையில் உள்ளது. தரவுகள் ஏதும் இல்லை’ என்பதை காண்பித்து உறுதி செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். இதை யடுத்து, தேர்தல் ஆணையம் அறிவுறுத் தியதும் அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்படும்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நானும் சென்று ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். இயந்திரங்களின் தேவை, மாவட்டவாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருப்பு உள் ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப் பாளர்கள், தேர்தல்நடத்தும் அலுவலர் களுடன் ஆலோசித்து வருகிறேன். 

கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளேன். மற்ற மாவட்டங்களி லும் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங் களில், ஏற்கெனவே இருந்த 32 மாவட்டங்களில் தேர்தல் துறைக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளன. இங்குதான் மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தளவாட பொருட் கள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென் காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கிடங்குகள் இதுவரை கட்டப்படவில்லை. இந்த கிடங்குகளை கட்ட இடம், கட்டடம் தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட் டுள்ளது.

6 புதிய மாவட்டங்களிலும் இப்போ தைக்கு அரசின் கிடங்குகளை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகி றோம். விரைவில் புதிய கிடங்குகள் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *