மழலையர் மலர்கள் தினம்

1 Min Read

13.8.2025 அன்று காலை 10:30 மணி அளவில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பிரிவில் மலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில் அனைத்து மழலையர்  பிரிவு பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று  ஒவ்வொரு பூக்களை பற்றியும் அதன் தன்மை, நிறம், பயன்  போன்றவைகளை  வாக்கியமாகவும், பாடலாகவும், ஆடலாகவும் மேடையில் பெற்றோர்களின் முன்னிலையில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவருடைய பெற்றோரும் தமது குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ந்து பள்ளியை பாராட்டி , பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்களையும் நிர்வாகத்தையும் பாராட்டிச் சென்றனர். பெற்றோர்களுக்கு தேநீர் மற்றும் ரொட்டித் துண்டுகள் வழங்கி விழா இனிதே மகிழ்வுடன் நிறைவடைந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *