பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…

1 Min Read

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில்  மாவட்டம் தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி வகுப்பின் தலைப்புகள் ஆகியன தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி ஒழுங்குபடுத்தப் பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன.

தலைமைக் கழகம் அறிவித்துள்ள இடங்கள் தவிர பிற இடங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த விரும்பக்கூடிய கழகப் பொறுப்பாளர்கள் (முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாலும்) பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக் கான பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு உரிய வகையில் பயிற்சிப் பட்டறை களை ஒருங்கிணைக்கத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மாவட்டங்களின் பொறுப்புக்கான தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒழுங்குபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை நிலையம், 

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *