கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.8.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* 17ஆம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடக்கம் ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு.

*சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு, காங்கிரஸ், சி.பி.அய். அறிவிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு பீகாரில் ‘இறந்த’ வாக்காளர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி: தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து பதிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்ட மாணவி ஜீன் ஜோசப், தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து தனது பட்டத்தைப் பெற மறுத்து,
ஆர்.என்.ரவி “தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்” என்று கூறினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஓய்வு மற்றும் நிரந்தர ஆட்சேர்ப்பு கொள்கை இல்லாததால் காலியிட நிலைமை “நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.” SSA நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்புமாறு நாடாளுமன்றக் குழு வலியுறுத்துகிறது

தி இந்து

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய சமூக பிரிவுகளில் வசதியானவர்களை இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு; விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருத்து.

* ‘தாயுமானவர் திட்டம்’ போன்ற திட்டங்கள் உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் மிக முக்கியமானவை; இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக உலகளாவிய பொது விநியோக முறையை (PDS) பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் கட்டுரை

தி டெலிகிராப்

* மரணம் காரணமாக பீகார் வரைவு பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மூத்த குடிமக்களை யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *