மணிப்பூரில் வன்முறை : உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்

Viduthalai
2 Min Read

ஆம்புலன்ஸில் வைத்து தாய், மகன் உள்ளிட்ட மூவரை உயிரோடு எரித்துக்கொலை செய்த கலவரக்காரர்கள்

அரசியல்

அகர்தலா, ஜூன் 08 மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டில்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வீட்டு முன்பு நேற்று போராட்டத்தில் ஈடு பட்டனர். இளம்பெண்கள் உள்ளிட் டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. குகி இன மக்களை காப்பாற்றுங்கள் போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து முழக்கங்களை எழுப்பி னார்கள். இந்த போராட்டம் காரணமாக அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை ஒன்றிய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. மணிப்பூரில் பெரும்பான் மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினத் தகுதி வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.310 பேர் காயம் அடைந்தனர். அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத் தப்படும் என்று அவர் அறிவித்தார்.  

ஆம்புலன்ஸ் எரிப்பு

இதற்கிடையே குகி பயங்கர வாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.  இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் காவல்துறை  பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்து, ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந் துள்ளனர். எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *