தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக காத்திருப்போர் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் தமிழ்நாடு அரசு தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு முழுவதும் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் முழுவதும் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. மேலும், சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகிறது. இதில், பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியை சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். இந்த சமயத்தில் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 31-ஆம் தேதியின்படி வேலை வாய்ப்பாக பதிவுதாரர்களது விவரங்களில், ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேர், பெண்கள் 35 லட்சத்து 71,680 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 266 பேர் உள்ளனர். 

வயது வாரியாக விவரங்களின்படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப் பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601, 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர் உள்ளனர். இதில், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6391 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ள நிலை யில், மொத்தம் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 583 பேர் என்றும் , பெண்கள் 49 ஆயிரத்து 71 பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *