வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

1 Min Read

சென்னை, ஆக.13- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வீட்டு பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைக்கு உதவும் ரசயான;g பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில், பிளாக் பீனாயில், கட்டிங் ஆயில், கிரீஸ், சோப்பு ஆயில், குழாய் சுத்தம் செய்யும் பவுடர், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் திரவம், பாத்திரம் கழுவும் சோப்பு மற்றும் திரவம், டிடர்ஜென்ட் சோப்பு, டெட்டால், மெட்டல் கிளீனிங் திரவம், ஆகியவை தயாரிக்க கற்றுக் கொடுக்கப்படும்.

இப்பயிற்சி வகுப்புக்கு 18 வயது நிரம்பிய, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர்வோருக்கு கூடுதல் விவரங் களை www.editn.in என்ற இணையதளத்திலும், 86681 02600 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *