பெரம்பூர், ஆக.13- சென்னை கொடுங்கையூரில் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத் தியது.
‘நீட்’ தேர்வில் தோல்வி
கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் சிறீவாரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா. இந்த இணையர்களுக்கு 2 மகள்கள் உண்டு.
மூத்த மகள் வெளிநாட்டில் 2-ஆம் ஆண்டுமருத் துவம் படித்து வருகிறார். 2-ஆவது மகளான மதனசிறீ (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதனசிறீ தோல்வி யடைந்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் (11.8.2025) இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து அறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மதனசிறீ உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.