பிஜேபிக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்

Viduthalai
2 Min Read

12-ஆம் தேதிக்கு பதிலாக 23ஆம் தேதி பாட்னாவில் கூடுகிறது

பாட்னா, ஜூன் 9 அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட் சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் பணி களை பீகார் முதல்- அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளம் தலைவ ருமான நிதிஷ்குமார் மேற் கொண்டு வருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா   சரத்பவார் உள் ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல் லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்று மையை வலுப்படுத்தவும் எதிர்க் கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது. இந்த கூட்டத்தை பீகா ரில் நடத்த மம்தா  பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டு இருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் உள்ளிட்டோர் 12-ஆம் தேதி இந்த கூட்டத்தில் பங் கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப் பட்டது.

தற்போது இந்த கூட்டம் 

23-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார். நிதிஷ்குமா ருடன் இணைந்து பாட்னாவில் செய்தி யாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸ் தலை வர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல மைச்சர் மம்தா  தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள் ளனர்’ என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண் டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர் கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப் புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார். 

அதன் படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி களின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *