நெய்வேலியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக் கூட்டம்

நெய்வேலி, ஆக. 13- வடக்குத்து திராவிட கழகம் சார்பில் அக். 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 9.8.2025 அன்று மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை நெய்வேலி ஆர்.சி.கேட் அருகில் மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

கிளைக் கழக செயலாளர் நூலகர் இரா. கண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன், மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.மணிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் நகர தலைவர் புலவர் சு.இராவணன்  தொடக்க உரையாற்றினார்.

கழக துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா.மாணிக்கவேல், நெய்வேலி நகரத் தலைவர் ச.சு.இசக்கிமுத்து, செயலாளர் கு.ரத்ன சபாபதி, அப்பியம்பேட்டை கோ.வேலு, பா.செந்தில் வேல், இரா.கந்தசாமி, க.சேகர், நா.முருகன், இரா.சின்னதுரை, இரு.ராஜேந்திரன், ப.மாணிக்கவேல், வா.சேகர், ராம.இந்திரஜித், தீன.மோகன், திராவிட அரசு பாவேந்தர் விரும்பி, ப.பாஸ்கர், தமிழ்மணி, கீதா, மதிவதனி, எழில்வதனி, அறிவாளன், சாக்ரடீஸ், திமுக செல்வராசு, பெரியார் மணி, தா.அருள்செல்வன், உ இன்பக்கனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் கிளை கழக தலைவர் தங்க பாஸ்கர் நன்றி கூறினார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *