பாராட்டுக்குரிய செயல்!

Viduthalai
1 Min Read

 மேலூர் அருகே பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்

மேலூர், ஜூன் 9– கிராமப்புற பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை வசதிகள் செய் வதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10லட்சம் வழங்கியுள்ளார் உறங் கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ந.அரு ணாசலம்.

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி. 836 மாணவ, மாண விகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5.5 ஏக்கர் பரப்பளவுடைய இப்பள்ளி யானது, மேலூர் கல்வி மாவட் டத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2ஆவது பள்ளியாக திகழ்கிறது. எனினும், இங்கு போதிய வகுப்பறை வசதிகள் இல் லாததால் மாணவர்கள் சிரமப் படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டும், தாம் பணியாற்றும் பள்ளி மாண வர்களின் நலன் கருதியும் தலைமையாசிரியர் ந.அருணா சலம், ரூ. 10 லட்சம் சொந்த நிதியை வழங்க எண்ணினார். 

அதனையொட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மா.சவு.சங்கீ தாவிடம் காசோலையாக வழங் கினார். தலைமையாசிரியரின் செயலை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இதுகுறித்து பள்ளி தலைமையா சிரியர் ந.அருணாச்சலம் கூறிய தாவது:

“உறங்கான்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 2021ஆம் ஆண்டு தலைமையாசிரியராக சேர்ந்தேன். மேலூர் கல்வி மாவட் டத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடைய 2ஆவது பள்ளி.

இங்கு கடந்தாண்டு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் எழுது வதற்காக தேர்வு மய்யம் ஏற்படுத் தினோம். தற்போது பள்ளி மாண வர்கள் நலன் கருதியும், சமுதாய நலன் கருதியும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் பெற்று அதனை ‘நமக்கு நாமே’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் காசோ லையாக வழங்கினேன். ‘நமக்கு நாமே’ திட்டத்தில் அரசும் பங் களிப்பு செய்து நிதி ஒதுக்கும். விரைவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *