சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஆக. 12- சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளை யாட்டு வீரர்கள் விண்ணப் பிக்கலாம் என்று தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த ஆணையம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:

தலைசிறந்த விளை யாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு செப்.8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனைத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளத்தின் (www.sdat.tn.gov.in) வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும். தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளி களாக உள்ளவர்கள், இப்போதைய திட்டத்தைத் தொடர மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் தகவல்கள், விவரங்கள் அனைத்தும் இணைய தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மய்யத்தை 95140 00777 என்ற கைப்பேசி எண்ணில் அனைத்து வேலை நாள்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *