மதுரை காந்திமதிநாதன் (வயது 102) மறைவிற்கு இரங்கல் !

1 Min Read

அரசியல்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியராக இருந்த திரு. அ. சுப்பையா அவர்களின் சகோதரரும், கழக ஆர்வலருமான சித்ராசுந்தரம் அவர்களின் அண்ணனுமாகிய திரு. அ. காந்திமதிநாதன் (அய்.ஆர்.எஸ்.) அவர்கள் மது ரையில் தனது மகன்   அய்யாதுரை வீட்டில் தனது 102ஆம் வயதில் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

சில மாதங்களுக்கு முன் மதுரை சென்றபோது, அவரது இல்லத்தில் அவரை நலம் விசாரித்து வந்தோம்.

அனைவரும் படித்த குடும்பத்தைச் சார்ந்த வர்கள், தந்தை பெரியார்மீது அளவற்ற மதிப் புடையவர்கள், மரியாதைக்குரிய காந்திமதிநாதன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத் தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் ஆறு தலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி. வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

9.6.2023 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *