பெரம்பலூர், ஆக. 11- பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக் காநத்தம் அரசு மேல்நிலை பள்ளி யில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தலைமையில் 9.8.2025 அன்று பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,435 மதிப்பிலான காதொலி கருவி, ஊன்றுகோல், மடக்கு ஊன்றுகோல் ஆகிய உதவி உபகரணங்களும், 17 மாற்றுத்திறனாளி பயனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை யினையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.