‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்

1 Min Read

பெரம்பலூர், ஆக. 11- பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக் காநத்தம் அரசு மேல்நிலை பள்ளி யில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தலைமையில் 9.8.2025 அன்று பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த  நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,435 மதிப்பிலான காதொலி கருவி, ஊன்றுகோல், மடக்கு ஊன்றுகோல் ஆகிய உதவி உபகரணங்களும், 17 மாற்றுத்திறனாளி பயனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை யினையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *