சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

மதுரவாயல் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று இரவு 07-30 மணிக்கு வேல்சாமி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி கடவுள் மறுப்பு கூற மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதியில் நடத்துவது குறித்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன்,செயலாளர் க.இளவரசன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
ஆவடி மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை.தமிழ்ச்செல்வன், சேத்பட் நாகராசன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணை செயலாளர் சென்னகிருட்டிணன், பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் தி.மணிமாறன், மதுரவாயல் தங்க.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மதுரவாயல் பகுதி கழக செயலாளர் தமிழன்காசி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *