திருவாரூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

அரசியல்

திருவாரூர், ஜூன் 9- திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சோழங்கநல் லூர் வெள்ளை மாளிகை அரங்கில் 6.6.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.

ஒன்றிய தலைவர் உ.கவுதமன் தலைமையில் மாவட்ட விவசாய தொழி லாளரணி செயலாளர் பி.ரத்தினசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை யில் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றிட,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலை வர் இரா.ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் கோ. கண்ணதாசன் இன்னும் நாற்பதுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் . 

இறுதியாக ஒன்றிய இளைஞரணி செய லாளர் செ.பாக்யராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1.

தந்தை பெரியார் மனித உரிமை போர் வைக்கம் நூற்றாண்டு விழா. நீதி கட்சி நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் நூற்றாண்டு விழா. திருவாரூர் ஒன் றியத்தில் வெகு சிறப்பாக தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும்  தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2.

அனைத்து பகுதிகளி லும் புதிய உறுப்பினர் களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3.

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து சந்தாக்களை வழங்குவது எனவும் தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 4.

தலைமை பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  எண் 5.

திருவாரூர் மாவட்டத் தில் ஒரு நாள்  பெரியாரி யல் பயிற்சிப் பட்டறை நடத்துவது எனவும், திரு வாரூர் ஒன்றியம் சார் பாக 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை யும் பங்கேற்க செய்வது எனவும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6.

செப்டம்பர் 17 அறி வுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை திருவாரூர் ஒன்றியம் கிளைக் கழக வாரியாக  கோலாகலமாக நடத்துவது எனவும் தீர் மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *