சென்னை, ஆக.11– தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிறப்புத் திட்டமாக மாணவர் மனசு பெட்டி திட்டத்தை அறிவித்து அதனை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அனைத்து அரசுப் பள்ளி களிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ‘‘ஆசிரியர் மனசு” திட்டமும் செயல்படுத்தப் பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கை களுக்காக மின்னஞ்சலும் அறிவிக்கப் பட்டது.
மாணவர்கள் தங்களின் விருப்பம், ஆலோசனை, கோரிக்கை ஆகியவற்றைக் கடிதமாக எழுதி, மாணவர் மனசு பெட்டியில் செலுத்தும் கடிதத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகளுக்கு நேரில் ஆய்வுக்குச் செல்லும் போது முதல் நிகழ்வாக மாணவர் மனசு பெட்டியில் உள்ள கடிதத்தைப் படித்து, உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர் மனசு பெட்டி கடிதங்கள் மீதும் உரிய தீர்வு கண்டு வருகிறார்கள் இந்தத் திட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாணவர் மனசு பெட்டி திட்டத்தை தற்போது கேரளா அரசும் “சுரக்சா மித்ரம்” என்ற திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது.