மூத்த வழக்குரைஞர் எஸ்.பாலதண்டபாணி மறைவு – கழகத் தலைவர் மரியாதை

1 Min Read

 

அரசியல்

மூத்த வழக்குரைஞரும், பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரியின் மேனாள் பேராசிரியரும், கழகத்தின் மீதும், தலைவர் மீதும் பெருமதிப்பு கொண்டவருமான  எஸ்.பாலதண்டபாணி (வயது 81) அவர்கள் நேற்று (08.06.2023) மறைவுற்றார். சென்னை உத்தண்டியில் அவர் பராமரிக்கப்பட்டுவந்த மகாவீர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.  திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை  – வீரபத்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தம்,  ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *