பூனைக்குட்டி வெளியில் வந்தது

1 Min Read

பார்ப்பனிய சமஸ்கிருதத்தை
தூக்கிப் பிடிக்க துள்ளும் பிரதமர் மோடி

‘உலக சமஸ்கிருத தினம் என்பதையொட்டி நாட்டு மக்களுக்கு நேற்று (9.8.2025) வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

சமஸ்கிருதப் பாரம்பரியத்தை ஊக்குவித்துப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வோா் ஆண்டும் சிராவண மாதத்தின் (ஆடி மாதம்) புனிதமானதெனக் கூறப்படும் பவுர்ணமி நாளில்  (9.8.2025) ‘‘உலக சமஸ்கிருத தினம்’’ கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘உலக சமஸ்கிருத தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். சமஸ்கிருதம் அறிவு மற்றும் ஆற்றலின் வெளிப்பாடாக, காலத்தால் அழியாத ஆதாரமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு துறையிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

உலகெங்கிலும் சமஸ்கிருதத்தை கற்றுத் தேர்ந்து, பிறருக்குக் கற்பித்து, பிரபலப்படுத் துவதில் தொடா்ந்து ஈடுபட்டுள்ள அறிஞா்கள், மாணவா்கள், ஆா்வலா்களின் அா்ப்பணிப்பை பாராட்டுவதற்கான சந்தா்ப்பம் இதுவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த ஒன்றிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் நிறுவுதல், சமஸ்கிருத கற்றல் மய்யங்கள் தொடங்குதல், சமஸ்கிருத அறிஞர்களுக்கு மானியம் வழங்குதல், சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை எண்மமயமாக்கு வதற்கான ‘ஞான பாரதம் இயக்கம்’ உள்ளிட்டவை அடங்கும். இது எண்ணற்ற மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளித்துள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாா்.

ஹிந்து மத இதிகாசங்கள் உள்பட முக்கியமான பண்டைய நூல்கள் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன. இப்போது பெரும்பாலும் மத நடைமுறைகளில் மட்டுமே இம்மொழி பயன்படுத்தப்படுகிறது.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *