பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துச் சிறப்புக் கூட்டம்

1 Min Read

நாகர்கோவில், ஆக. 9- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்க திராவிடர்கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார். இந்து, இந்தி,இந்தியா என்ற தலைப்பில் அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சுந்தரம் சிறப்புரையாற்றினார்.

பா.ஜ.க ஆட்சியில் மக்கள் படும் இன்னல்கள், பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல் லைகள் குறித்து உரையாற்றினார்கள். பேராசிரியர் சுபாகரன் பொதுக்குழு உறுப்பி னர்கள் மு.இராஜசேகர், மா.மணி, ம.தயாளன் ஒன்றிய செயலாளர் எஸ்.குமார தாசு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட கழக மகளிரணி தலைவர் இந்திரா மணி, மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார், திராவிடர்கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாணவர் கழக அமைப்பாளர் இரா.முகிலன், குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ் கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, சதீஷ் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *