மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? திருவாரூரில் துண்டறிக்கை பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கி பரப்புரை

1 Min Read

திருவாரூர், ஆக. 8- ராஜராஜன், ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்?, மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?, என்ற தலைப்பில் தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கட்டளையை ஏற்று திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் 7.8.2025 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பழைய பேருந்து நிலையம், பெரியார், கலைஞர் சிலை அருகில் மற்றும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பகுதிகளில் பொதுமக்களிடம் மாநில இளைஞரணி செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், விவசாய தொழிலாளரணி க.வீரையன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *