செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர் புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், உரிய அலுவ லர்களை நியமிப்பதுடன், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலை மைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

தவணையில்…

தரைதளம் மற்றும் முதல் தளம் வரையிலான 1800 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு குடிநிர் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை இனி 10 தவணைகளில் 5 ஆண்டுகளில் செலுத்தும் விதமாக விதிகளை சென்னை குடிநீர் வாரியம் எளிமைப்படுத்தியுள்ளது.

உரிமையை மீட்ட…

மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தும் உரிமையை மீட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

நாய்களை

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாய்களின் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரங்களில் வகுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *