இதுதான் பகவான் செயலோ? ‘சாமி ஊர்வலத்தில்’ கரகம் சுமந்து சென்ற பக்தர் சாவு!

1 Min Read

கள்ளக்குறிச்சி, ஆக.7- கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்புத்தமங்கலம் கிராமத்தில் உள் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 5.8.2025 அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் ‘அம்மன் வீதி உலா’ நடைபெற்றது. மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, கிரா மத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு தெருவில் சென்றபோது, அம்மனின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடை அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பியில் எதிர்பாராமல் உரசியது.

இதில் மின் கம்பி அறுந்து அம்மன் முன்னால் கரகம் சுமந்து சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கோவில் திருவிழாவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *