முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

Leave a Comment