முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இைணந்தார் அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்

1 Min Read

சென்னை, ஆக.7 அதிமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக போகும் போக்கே சரியில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

கார்த்திக் தொண்ைடமான்

பாஜவுடன் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைத்ததை அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியில் இருந்து விலகி முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், மேனாள் அமைச் சருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று (6.8.2025) புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவரும், புதுக்கோட்டை அதிமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினராகி இருந்தவருமான இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் புதுக் கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவும், நகர்மன்ற மேனாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்’’ என கூறப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக, மதவாத சக்தி கட்சிகளுக்கு உறுதுணையாக போகிறது.

அது எனக்கு பிடிக்கவில்லை. அவர்களது செயல்பாடுகளும் சரியில்லை. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழ்நாடு நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட திமுகவில் இணைந்து நிச்சயமாக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *