முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில், முதன் முதலான நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி,, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், துணைப் ெபாதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்துவாவாசி, மல்லை சத்யா,  மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் க. அன்பழகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன்,  சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மகளிரணி செயலாளர் வாசந்தி,  தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அய்ஸ்அவுஸ் அ. அன்பு எம். ரங்கநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தொழிலாளரணித் தலைவர் மா. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த. மரகதமணி,  மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தொழிலாளரணித் தலைவர் ஆ.துரைராவணன்,  கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப. கோபாலகிருட்டிணன், பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச. இராசேந்திரன், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க. துரை, அண்ணாநகர் ப.சேரலாதன், மகளிரணி கோ. அன்புமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஜீவானந்த் மனோகரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி. ஜெயராமன், கலைச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை. க. தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ஜரவேலு, பூவை பகுதி தலைவர் க.ச. பெரியார் மாணாக்கன், க. கலைமணி, ஆளந்தன், மகேஷ் கணேசன், முகப்பேர் தி. முரளி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், திருநின்றவூர் இராசேந்திரன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலைஞர் நினைவிடத்திற்கு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *