சீனாவில் எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்கப் பயிற்சி அளிக்கும் பல்கலைக்கழகம்

1 Min Read

பீஜிங், ஆக. 7- எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்கும் (பார்பிக்யூ சமையல் முறைக்கு)அறிவியல் பூர்வமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சீனாவில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.  இது சீன உணவு கலாச்சாரத்தில் புதிய வளர்ச்சியாகும்.

ஆய்வு நிலையம்

இந்த ஆய்வு நிலையம், எண்ணெய் இல்லாமல் உணவுப் பொருட்களைச் சுட்டுச் சமைக்கும் முறைகளில் நிபுணத்துவம் பெற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,000 கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 மாணவர்கள் வரை இந்தப் படிப்பில் சேரலாம்.

பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித்தரும் பார்பிக்யூ துறையில், திறமையான நிபுணர்களை உருவாக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் இந்தத் திட்டத்தைப் பாராட்டியும், சிலர் கேலி செய்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது பார்பிக்யூ துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என நம்பப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *