முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2025) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளம் மற்றும் சட்டத் துறைஅமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.