கழகக் களத்தில்…!

2 Min Read

9.8.2025 சனிக்கிழமை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்
மற்றும் பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: முற்பகல் 11 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி. *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் *தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழக காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு பற்றி. *தொடக்கவுரை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்) *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கதிர் செந்தில்குமார் (மாவட்டத் தலைவர், ப.க.), இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணை செயலாளர்)

தூத்துக்குடி  மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 3 மணி முதல் 4 மணி வரை *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 *தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்), சு.காசி (மாவட்டக் காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல், விடுதலை நாளிதழுக்குச் சந்தா சேர்த்தல் – புதிப்பித்தல், செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா – இயக்கச் செயல்பாடுகள். *வேண்டல்: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாவட்ட , மாநகர, ஒன்றியக் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். *நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்)

2025 அக்.4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு
மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: நூலகர் இரா.கண்ணன் (கிளைக் கழக செயலாளர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வம் (மாநில ப.க. அமைப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *நன்றியுரை: தங்க.பாஸ்கர் (கிளைக் கழக தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *