பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவையும் மற்றும் உள்ள உறுதியையும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமும் உள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மாநில, மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழக மாவட்டங்களை சேர்ந்த தகுதியான 5 தோழர்களை ஒவ்வொரு மாவட்டமும் பங்கேற்கச் செய்திடுமாறு அறிவுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 06.09.2025 சனி – 07.09.2025 ஞாயிறு
இடம் : கோபி
வயது : 18 வயது முதல் 30 வயது வரை
பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:
கோபி, நீலமலை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி.
இவண்:
சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்,
பெரியார் சமுகக் காப்பு அணி (9710944834)