எஸ்.எம்.பொன்னி-பா.வினோத் இணையேற்பு விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

நாகப்பட்டினம், ஜூன் 10- நாகப்பட்டினம் மாவட்ட கழக அமைப்பாளர் பொன்.செல்வராசு-பானுமதி ஆகியோரின் பெயர்த்தியும்,  எஸ் முத்துச்செல்வியின் மகளும் ஆகிய  எஸ்.எம்.பொன்னி-திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை பாஸ்கர்-அன்புக்கரசி மகனுமாகிய பா.வினோத் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழா திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் நடைபெற்றது. 

வாழ்க்கை இணையேற்பு விழா விற்கு தலைமை ஏற்று திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்தி கழகத் தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ். டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, திருவாரூர் மாவட்ட செய லாளர் வீர.கோவிந்தராஜ், மாநில விவசாய அணி செயலாளர் வீரை யன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நாத்திகப் பொன்முடி, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.அருண் காந்தி, பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் நன்னிலம் கரிகாலன், நாகை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச. முருகையன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, நாகை மாவட்ட துணை செயலாளர்  ரே.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் சி.தங்கையன், நாகை நகர அமைப்பாளர் நாகை.ரவி, எரவாஞ்சேரி மாஸ்டர் ராஜா, நன்னிலம்.சரவணன், ஓவியர் சங்கர், இளையராஜா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைத்துக் கட்சி நண்பர்கள், தோழர்கள் அனைவரும் பங்கு கொண்டு வாழ்த்தினர்.

முன்னதாக நாகை மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராஜ் மணவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *