மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்!

1 Min Read

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

அரசியல்

பெங்களூரு, ஜூன் 10- கருநாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பெங்களூருவில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து மேனாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் வீட்டிற்கு பரூக் அப்துல்லா சென்றார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறும்போது, மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மாநில கட்சிகள் மதவாத எதிர்ப்பு அணியில் இணைய வேண்டும்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *