மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்!

Viduthalai
1 Min Read

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

அரசியல்

பெங்களூரு, ஜூன் 10- கருநாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பெங்களூருவில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து மேனாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் வீட்டிற்கு பரூக் அப்துல்லா சென்றார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறும்போது, மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மாநில கட்சிகள் மதவாத எதிர்ப்பு அணியில் இணைய வேண்டும்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *