முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி 7.8.2025 வியாழன் காலை சரியாக 10.00 மணிக்கு மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில் முதன் முதலாகக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்