பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை என்பதா? புள்ளி விவரத்துடன் பேச வேண்டும் அன்புமணிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

1 Min Read

சென்னை, ஆக.5 பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேச வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாமகவைச் சேர்ந்த அன்புமணி, தன் தந்தையான ராமதாஸை எதிர்த்து தமிழ்நாட்டில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.

பாலாற்றில் தடுப்பணை

வேலூருக்கு வந்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது,  நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல் கொச்சைப் படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, இந்த மாவட்டத்தில் ஓர் அமைச்சர் இருக்கிறார். பாலாற்றில் ஒரு தடுப்பணை யாவது கட்டியதுண்டா என்று முழக்க மிட்டிருக்கிறார்.

அன்புமணி  கொஞ்சம் விவர மானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து விவரம் தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக கலைஞர், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நான் இந்த துறைக்கு அமைச்சராக இருந்தபோது, பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல் ஆகிய இடங்களிலும் கவுண்டன்யா நதியில் ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பென்னையாற்றில் பரமசாத்து, பொன்னை, குகையநல்லூர் ஆகிய இடங்களிலும் தடுப்பணைகள் கட்டினேன்.

புள்ளி விவரம்

இதுதவிர பாம்பாற்றில் மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில் கரியகூடல், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடி, மலட்டாற்றில் நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில்- பெரியாங்குப்பம், கானாற்றில் சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளேன். இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி- செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணி இனிமேலாவது பேசும்முன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *