ராமர் கல் எனக் கூறி பக்தர்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

1 Min Read

ராமேசுவரம், ஆக.5 ராமேசுவரத்தில் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமர் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று (4.8.2025) அகற்றினர்.

ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் உள்ள மன்னார்வளைகுடா உயிர்க்கோளக் காப்பக கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளைப்பாறைகள் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன.

கடலிலிருந்து பவளப்பாறைகளை வெளியே எடுத்ததுமே அது உயிரிழந்து விடும். பின்னர், பவளப்பாறை உலா்ந்ததும் தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும். இந்த பவளப்பாறைகள் அழகு சாதனப் பொருள்கள், விற்பனைக்காக வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது.

இதனால், பவளப்பாறைகளை கடலில் இருந்து எடுப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தடை விதித்தது. மேலும், இந்தப் பவளப்பாறைகளை பாதுகாக்கவும், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

வசூல் வேட்டை

இந்த நிலையில் ராமேசுவரம் ராம நாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலான கோதண்டராமர் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையில் சிலா் கிணறு வடிவில் தொட்டி அமைத்து அதில் பவளப்பாறைகளை மிதக்க விட்டு இந்தக் கல்லில்தான் ராமர் பாலம் கட்டினாா் எனவும், அதன் அருகில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாட்டுத் தலத்தையும் ஏற்படுத்தினர்.

மேலும், இவர்கள் கோதண்ட ராமர் கடற்கரைக்கு வரும் பக்தர்களிடம், ‘‘இந்த கல்லை (பவளப்பாறை) கடலில் மிதக்க விட்டு ராமர் பாலம் அமைத்து இலங்கை சென்று சீதையை மீட்டார்’’ எனக் கூறி, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தினர். இதுகுறித்து பல்வேறு தரப்பினர் இந்து சமய அறநிலையத் துறை, ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இந்த வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அகற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *